தாயன்பு

தாயன்பு போலே இத்தரணி தனிலே
தரமான பொருள் ஒன்றும் இல்லையடா !

நோயடைப் பட்டது தீருவதற்கும் அதைவிட
நோன்பும் மருந்தும் கூட இல்லையடா !

வாயற்ற சீவன்கள் கூடத் தாயன்பைப்
பிரிந்து வாழுதல் செய்யாதே !

தாயவள் அன்பை மானிடா நீமட்டும்
மறந்து வாழ்ந்து மாய்வது ஏனடா ?

காயது பழமாகி கீழே விழும்வரை
கிளைக்கு அது ஒன்றும் பாரமில்லை !

சேயவன் நீமட்டும் தாயன்பைப் பேணினால்
சகத்தினிலே வளர்ந்த முதியோர் இல்லமெல்லாம்

வாயடைத்துப் போகும் இதுதான் உண்மை !
வாயில் கதவுகள் மூடும்நிலை உண்மை !

எழுதியவர் : விவேக்பாரதி (9-Jan-14, 9:53 pm)
பார்வை : 639

மேலே