இணைந்திடு தமிழா
மதத்தால் மடிந்து போனோம்
சாதியால் சரிந்து போனோம்
பணத்தால் பாதிப்பாதியாய் போனோம்
அரசியலால் அழிந்து போனோம்
ஆசையால் அமிழ்ந்து போனோம்
இறுதியாய் சினிமாவினாலும் சிதறுண்டு போனோம்
இனி
அன்பால் குடும்பங்களில் இணைந்திடுவோம்
பாசத்தால் பங்காளியுடன் இணைந்திடுவோம்
மனிதாபிமானத்தால் மனிதர்களாய் இணைந்திடுவோம்
தமிழ் மொழியால் தரணியெங்கும் இணைந்திடுவோம்
இங்கிலாந்து முதல் ஈழம் வரை இணைந்திடுவோம்
இணைந்திடு தமிழா ஒன்றுபட்ட தமிழ் இனத்தை உருவாக்கிட இணைந்திடு
“உரக்க சொல் உன் குரல் கேட்கும்வரை
நாம் தமிழர் என்று”
-தமிழரசு.
14 சனவரி 2014