எல்லாம் பொய்
சாலையின் ஓரப்பார்வையில்
சிக்கினான் ஒருவன்
உலகே பொய் என்றான் அவன்
உலகம் அவனை பித்தன் என்றது
நின்று பார்க்க யாருமில்லை - அவனும் இந்த
நில்லாவுலகினை கண்டுகொள்ள வில்லை
எல்லா மனிதரும் அவனுக்கு ஒன்று தான்
எல்லாருக்கும் அவன் ஒன்று தான்
உலகே பொய் என்றான் - மீண்டும்
உணர்ந்து பார்க்க நேரமில்லை
என் பேருந்து வந்து விட்டது
என் பார்வையோ அவன் மீதே
எழுந்து வந்தான் எதிரில்
எமனின் தூதன்
கண் இமைக்கும் நேரம் - அவனை
காலன் கொண்டு சென்றான்
இனி அவனும் பொய்
நாளை நானும் பொய்
உணர நேரம் கிடைத்தது
உணர்ந்ததை அறிவு ஏற்க மறுக்கிறது
எல்லாமே பொய்
இங்கு எல்லாமே பொய்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
