தெய்வத்தை நம்பாதே - இது வள்ளுவன் சொன்ன வாக்கு

(மேல் இருக்கும் புகைப்படத்தில் காணப்படும் சங்கிலி, சோப்பினால் (PEARS) செய்யப்பட்டது. 85 சங்கிலித் தொடர்கள் கொண்டது. வெட்டுகள் ஓட்டுகள் எதுவும் கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கியே செய்தது. இதன் சுற்றளவு 1.5 அடிக்கு மேல். ஒருவர் அணிந்துகொள்ளலாம். 15 நாட்கள் தேவைப்பட்டது இதனை நான் செய்துமுடிக்க.)

கனவுக்கு கால்கள் கட்டி
நடை போட பழக்கி வைத்து
நினைவென்னும் தூரிகை கொண்டு
நிழல் ஓவியம் தீட்டிக் கொள்..
 
கண்களுக்கு சொல்லி வை
சுவாசக் காற்றுக்கும் சொல்லி வை
களவு போன மனதுக்கும் சொல்லி வை
கொண்ட காரியம் நிறையும் வரை இவன் ஓய்வதில்லை என்று..
 
ஒளிவருடம் கண்டவன் நீ
அலை கடல் ஆழம் அளந்தவன் நீ
ஆகாயத்தில் பறந்தவன் நீ
அணுவையும் பிளந்தவன் நீ

உறக்கத்தில் திளைக்காதே
உனக்குள் இருக்கும் உயிர்த்திறன் எழுப்பு
காலத்தின் மணித்துளிகள் ஒவ்வொன்றும் வைரங்கள்
நிற்கின்ற நேரத்தில் நடை போட பழகிக்கொள்
 
வெற்றி வேறெங்கும் இல்லை.. உன்னுள் இருக்கிறது..!!

எழுதியவர் : வெ கண்ணன் (19-Jan-14, 8:15 am)
பார்வை : 232

மேலே