நிரந்தர உறவுகள்

எண்ணத்தின் ஆசைகள்

கைக்குள் அடங்கவில்லை

எல்லையற்று கடந்து செல்கிறது

நினைவுகளின் ஊடறகம்

வலிதான் மொழியாகிறது

அதன் வாசலில் கண்ணீர்தான் முதலில் சுவாசிக்கிறது

தனிமையோடு விளையாட

அங்கு தென்றல் அழைக்கிறது

இனிமைகள் பல பேச

கண்விழிகள் எதையோ எதிர்பார்க்கின்றது

மின்மினியாக வந்துபோகும் நண்பர்களில்

எவரேனும் சிலர்மட்டும்தான் நெஞ்சத்தில் நிரந்தரமாக

கவலைகள் பல இருந்தாலும்

நமக்காக பிராத்தனை செய்யும் தாயும்

வலிகள் எல்லைகடந்தாலும்

தனக்காக கண்ணீர்விடும் தாரமும்தான்

இந்த உலகின்

நமக்கான நிரந்தர உறவுகள் .....

எழுதியவர் : காந்தி. (24-Jan-14, 1:42 pm)
Tanglish : NIRANTHARA uravukal
பார்வை : 200

மேலே