புரோட்டா

புரோட்டா சுடுபவர் - ஏன்யா...டெய்லி அம்பது புரோட்டா சாப்பிடுவாரே.. அந்த புரோட்டா...புண்ணியகோடி...கொஞ்ச நாளா கடை பக்கமே...காணுமே...

மாவு பிசைபவர் - நாட்டுலே ...மனசார...உண்மைய சொல்றது...தப்போன்னு தோணு ...துண்ணே ...உண்மை
சுடும்னு சொல்வாங்க....அவர சுட்டுடுச்சோன்னு தோணுது...இனி..நான் உண்மையே...பேசமாட்டேன்....
...
புரோட்டா சுடுபவர் - நீ என்னய்யா...உண்மை பேசினே...அவர எது சுட்டுச்சு...குழப்பாதய்யா....

மாவு பிசைபவர் - வேற ஒன்னும் .. இல்லேண்ணே ...அவரு சொன்னாரு...ஊருலே...ஒலகத்துலே...எத்தனையோ இடத்துலே... புரோட்டா..சாப்புட்டு இருக்கேன்...ஒங்க கடை புரோட்டா..மாதிரி மென்மையும்......ருசியும் ...எங்கேயுமே..இல்லேய்யா...அப்புடியே...பொல..பொலன்னு...உதிருதே... ன்னாரு .....

அதுக்கு...நான் சொன்னேன்...பின்னே..என்ன சும்மாவா....காலைலே...கடைலே உள்ள அத்தனை பேரும் மாறி..மாறி...பிசைஞ்ச மைதாவ... ஒரு ரெண்டு மணி நேரம்..கஷ்டப்பட்டுல்ல..வெறும் காலால... மிதிக்குறோம்னு... சொன்னேன்...இத போய் பெரிசா..எடுத்துக்கிட்டாரோன்னு...தோணுது...

எழுதியவர் : (29-Jan-14, 4:37 pm)
பார்வை : 105

சிறந்த நகைச்சுவைகள்

மேலே