+++நீங்க எவ்வளவு நல்லவரு+++
எதுவுமே எப்பவுமே அளவா இருந்தா தான் சிறப்பு..அப்பத்தான் அதை வீணாக்காம உபயோகிக்க முடியும்..
எதுக்குங்க என்னைய விருந்துக்கு கூப்பிட்டிட்டு இது மாதிரி சொல்றீங்க...?
அது பாருங்க.. இன்னைக்கு உங்களுக்காக சமைச்சிருந்த பிரியாணிய எங்க ரெண்டு பசங்களும் சாப்பிட்டு காலி பண்ணீட்டாங்களாம்.. இப்போதைக்கு நேத்தய பழைய சோறு தான் இருக்கு.. அதுவும் கொஞ்சமாத்தான் இருக்காம்.. அதுவே உங்களுக்கு போதும்னு நான் சொல்றேன்..எம்பொண்டாட்டி என்னடானா நம்ப மாட்டேங்கறா..நீங்க எவ்வளவு நல்லவரு.. இதுக்கெல்லாமா நீங்க கோவிச்சுவிக்கீங்க...