===+++காதல் ரொம்ப நீளம்+++===

மனசில் உன்னை வச்சிருக்கேன்
என்று சொன்ன மானே - அந்த
மனசு எங்கே போனதடி
மாமரத்து தேனே...

பிரிவு என்ற வலிகளுக்கு
இல்லையடி பேதம்
பித்தனாக்கி அலையவிடும்
காதல் ரொம்ப நீளம்...

உண்மையான காதல்தானே
கடலைவிட ஆழம் - அந்த
உணர்வலைகள் ஓயாமல்
மனதில் வந்து மோதும்...

உச்சிவெயில் புழுதிகாட்டில்
உருளும் புழுவைப்போலே
உணர்வு எரிக்கும் பிரிவுத்தீயில்
கருகுறேண்டி நானே...

காரணங்கள் சொல்லி என்னை
கலங்க வைக்கும் மாது - அந்த
காதலிலே கண்ணீ ரெழுதும்
கதைகள் முடியாது...

விதியின்மீது பழியைப்போட
விருப்பமில்லை மானே - அந்த
விதியைக்கூட வீழ்த்திவிடும்
உண்மைக்காதல் தானே...

இடியைக்கூட தாங்கிக்கொள்ளும்
இமயம்போன்ற உள்ளம் - அதில்
இளரத்தம் கசியுதடி
காதல் செய்த கள்ளம்...!!!


----------நிலாசூரியன்.


குறிப்பு;- நான் காதல் கவிதைகள் எழுதி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது, தொடர்ந்து சமுதாயக்கவிதைகளையே எழுதிக்கொண்டு இருந்தேன், ஆகையால் காதல் கவிதை எழுதுவதை மறந்துவிட்டேனோ என்ற அச்சம் திடீரென எனக்குள் தோன்றியது, ஆகையால் இந்த கவிதையை எழுதினேன், நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த காதல் கவிதையை எழுதியதால், இதை எழுத மிக சிரமபட்டுவிட்டேன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (6-Feb-14, 10:32 am)
பார்வை : 212

மேலே