அன்போடு வாழ்ந்திருப்போம்
அன்பிற்கு அடங்காதோர்
அவனியில் யாருமில்லை
கொல்லும் குணமும் மாறும் - அன்பினால்
கொள்ளும் இன்பம் யாவும்
கண்ணீரை இனிப்பாக்கும் கருணையால் நம்
காலமெலாம் வசந்தமாக்கும்
அன்புவைத்து வாழ்ந்து வந்தால் நம்
அகில வாழ்க்கை இன்பமாகும்.....