புதுமணம் வீசும் திருமணம்

இரு விழிகளின்
ஒரு பார்வையை போல
இரு வரிகளின்
ஒரு பொருளாய் வாழ
களவாடிடும்
கலையாகிடும்
புதுத்தேடல்
ஒரு உயிர் இன்று
புலம் பெயர்ந்திட நேரும்
மறு இதயமும் அறை
திறந்திட சேரும்
செயல் இழந்தினும்
இது நிகழ்ந்திட பாயும்
செம்புனல்
கரை பிறந்திடும்
ஒரு ஆமையை போல
உடல் பிரிந்தினும்
உயிரானது வாழ
உடன் சேர்ந்திடும்
கலந்தாகிடும்
அகக்கடல்