இன்று எரிந்துபோன தங்கையின் நினைவாய்

அவள்
எரிந்து போனதாய்ச்
செய்தி வந்தது !
இளம் வயது முதல்
வறுமையிலே வெந்தாள்
ஏழைப் பெற்றோரால்

வயதுக் காலத்தில்
வரதட்சணைக் கொடுமையால்
நொந்து வெந்தாள்

குடிகாரக் கணவனுக்கு
வாழ்க்கைப் பட்டு
அடி உதையால்
நாளும் நொந்து
வெந்து வாழ்ந்து வந்தாள்
அந்தத் தங்கை!

அவள் தன்
ஒரே மகளைக்
கட்டிக் கொடுத்து
சில நாட்கள்தான்
ஆகிறது !
கூலி வேலையும்
கொடுமை வாழ்க்கையுமாய்
கொஞ்சம் கொஞ்சமாய்
நாளும் வெந்தது போதும்
என்று தீயில் முழுவதும்
தானாய் வெந்தாயோ தங்காய் !
(இன்று 14.2.11 எழுமலையில் எரிந்துபோன தங்கையின் நினைவாய்)


எழுதியவர் : (14-Feb-11, 3:35 pm)
சேர்த்தது : வா. நேரு
பார்வை : 378

புதிய படைப்புகள்

மேலே