நிறைவேறாத ஆசைகள் என்ன செய்துகொண்டிருக்கும் - கஸல்

நிறைவேறாத
நம் ஆசைகள்
இந்நேரம்
என்ன செய்துகொண்டிருக்கும்?

உன் பேரழகை நீயே
வியந்து கொண்டு
வீட்டைவிட்டு வெளியேறுகிறாய்
முகத்திரை அணிந்துகொண்டு

நான் அழுது
இறைவனைப் பெற்றேன்
நீ அழுது
என்னைப் பெற்றாய்

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (24-Feb-14, 7:20 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 75

மேலே