மீண்டும் வந்திடுமா அந்த பொற்காலம்
'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?
1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களைஇந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன்மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலிசெய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே.
தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூடபடுத்து உறங்கியவர்கள் நாம் தான். எந்த விதஉணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாகஇருந்ததில்லை. கிச்சன் அலமாரிகளில் சைல்டுபுருஃப் லாக் போட்டு இருந்ததில்லை. புத்தகங்களைசுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை. சைக்கிள்ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டிவிளையாண்டது இல்லை. பள்ளியில் இருந்துவீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரேவிளையாட்டுதான், ரூமிற்குள் அடைந்து உலகத்தைபார்ப்பதில்லை.
நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான்நெட் நண்பர்களிடம் இல்லை. தாகம் எடுத்தால்தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால்பாட்டில் வாட்டர் தேடியதில்லை. ஒரே ஜூஸைவாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும்நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை. அதிகஅளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறையசாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாகஇருந்ததில்லை. காலில் ஏதும் அணியாமல் இருந்துநாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும்நேர்ந்ததில்லை.
சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும்கண்ணாடி அணிந்ததில்லை. உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை. மிஞ்சியசாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல்வலிமை பெற்றவர்கள். எங்களுக்கு வேண்டியவீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கிவிளையாடி மகிழ்வோம். எங்கள் பெற்றோர்கள் பணவசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும்அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால்ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும்கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களைஅல்ல.
அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான்நாங்கள் இருந்து வந்தோம். அவர்கள் எங்களைதொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தைபோதுமானதாக இருந்தது. அதனால் தொடர்புகொள்ள செல்போனை தேட அவசியமில்லை. உடல்நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடிவருவார். டாக்டரை தேடிஒடியதில்லை.
எங்களது உணர்வுகளை போலியானஉதட்டசைப்பினால் செல்போன் மூலம்பறிமாறவில்லை. உள்ளத்தில் இருந்து வரும்உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதிதெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில்இருந்து என்றும் மாறியதில்லை. எங்களிடம்செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ்,வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட்போன்றவகள் இல்லை. ஆனால் நிறைய நிஜமானநண்பர்கள் இருந்தனர்.
வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்குசென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம்.அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதிபெற தேவையில்லை. எங்கள் காலங்களில் திறமைமிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள்சமுகத்திற்காக தங்கள் செல்வங்களைசெலவிட்டனர். இந்த காலம் போல சமுகசெல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாகஇருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ்எடுத்தத்தில்லை. நாங்கள் எடுத்த புகைபடங்கள்கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில்உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்லஎண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால்இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராகஇருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின்எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன. இலவசம்பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை. இந்தகாலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள்அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்பசொல்லுங்கள்.
( படித்தது .. )