திரு அகன் அய்யாவிற்கு வாழ்த்து

எனக்கென்று ஒரு முகம் கொடுத்து
ஏணிப்படியில் ஏற்றிவிட்டிருக்கும்
அகன் ஐயாவிற்கு
வாழ்த்த வயதில்லை
வணங்குகிறேன் பணிவுடனே.....

வாடிய பயிராய் இருந்த பலருக்கு
வள்ளலாய் மழை பெய்து துளிர்க்கச்செய்தவர்..
தேடிய வண்டுக்கு ஓடியே வந்து
தேனெனும் அன்பு கொடுத்து சிரிக்கச்செய்தவர்..
பாடிய குரலுக்கு இசையாக வந்து
பந்தமாய் சொந்தமாய் பக்கம் நின்றவர்..
நாடிய பலருக்கு நண்பனாய் இருந்து
நந்தவன மலராக மணக்கும் நாயகர்..

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (24-Mar-14, 5:49 pm)
பார்வை : 207

மேலே