நாவலில் வரும் நாயகி 3

பாவலன் கவிதைப் புத்தகமே
------------பாவையரும் பார்த்திடும் பேரெழிலே
ஆவல் கொள்ளுதடி உள்ளம்
------------திருப்பித் திருப்பி பார்த்திடவே
நாவலில் வரும் நாயகிபோல்
------------நயனங்களில் நீலம் உடையவளே
தாவல் புரியுதடி நெஞ்சம்
------------தத்தித் தவிக்குதடி நித்தம் .

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Mar-14, 4:35 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 106

மேலே