நீ என்ன சொல்ல போகிறாய்

கலைத்து கலைத்து காதலித்த நீயே
இன்று
கண்டு கொள்ளாது போவது ஏனோ !
அன்று நான் பதில் சொல்லாத போதே
நீ கண்டு கொள்ளாது விட்டிருந்தால்
கவலைப்பட்டிருக்கமாட்டேன் இன்று நான்
உறவுகள் நிற்பதால் தான்
உன் உரிமையை கைவிட்டாயோ!
நீயும் பெண் என்பதை
எனக்கே புரியவைக்கிறாயோ!
பாரதி கண்ட புதுமை பெண்ணாய்
பார்த்தவன் உன்னை நான்
நொண்டி சாட்டு சொல்லி
தப்பிக்க எண்ணாதே !
பெண்ணே!
நான் உன்மீது கொண்டகாதல்
கடல் அளவாக இருக்கலாம்
உன்பார்வை கரையொதுங்க செய்வதேனோ!
காதல்கள் என்றும் தோற்பதில்லை
காதலர்கள் தான் தோற்கிறார்கள்
இது காலத்தின் கட்டாயம்.
நம்பிக்கையுடன் காத்திருப்பேன்
உனக்காக என்றும்
நீ என்ன சொல்ல போகிறாய் என்று !

எழுதியவர் : TP Thanesh (19-Apr-14, 8:18 pm)
சேர்த்தது : TP தனேஷ்
பார்வை : 141

மேலே