காதல் கூட்டவே
தாகமுண்டு
தண்ணீருடன்
திரிகிறேன்
பருகாமலே
மோகமுண்டு
மௌனங்களோடு
அலைகிறேன்
அழியாமலே
இராகமுண்டு
லயித்தே
இசைகிறேன்
இரையாமலே
மானமுண்டு
மறந்தே
போகிறேன்
மறைக்காமலே
வீதியுண்டு
மிதந்தே
போகிறேன்
மீளாமலே
நண்பனுண்டு
நானே
நகைக்கிறேன்
தானாகவே
புத்தியுண்டு
பூவை
பார்க்கிறேன்
அவளாகவே
பக்தியுண்டு
தீர்ப்பை
நாடினேன்
வரமாக்கவே
பசியுண்டு
புரண்டு
கிடக்கிறேன்
கணமாளாவே
காதல் கனம்
கூட்டவே