சென்னையில் மகாகவி

தோழமை நெஞ்சங்களே

நேற்று சென்னையில் நிகழ்ந்த விருதளிப்பு விழாவில் தோழர்கள் காளியப்பன் எசக்கியேல் மற்றும் விநோத்கண்ணன் மகாகவி ஈரோடு தமிழன்பன் -(தோழர் சிகரம் செந்தில்நாதன் இன்றைய புதுக்கவிதை உலகின் மகா கவி என தமிழன்பன் ஏற்கத் தக்கவர் என்றும் இனி அவரை நாம் மகாகவி என்றெ விளிக்க வேண்டும் என மொழிந்தார்-நானும் தமிழன்பன் ஒரு மகாகவி எனும் 300 பக்க பன்னாட்டு அறிஞர்களின் ஆய்வுரைகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளேன் .)...கவிக்கரங்களில் இருந்து தமிழன்பன் 80 எனும் விருது பெற்றனர்.


தோழர்களே இன்றைய மரபு வழிப் பாடல்களில் அதிக புலமையும் ஆர்வமும் கொண்டு மிளிரும் தோழர் காளியப்பன் அவர்கள் (என்னைவிட அகவையில் மூத்தவர் )தன் உடல்நலக் குறைவையும் நோக்காது விழாவில் கலந்துக் கொண்டது எனக்கு பேரு மகிழ்வை அளித்தது...

இவர்களோடு முனைவர். கா.செல்லப்பன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார். ஆங்கிலம் தமிழ் என இரண்டு மொழிகளிலும் ஒப்புமை இலக்கிய உரை வீச்சு அளிப்பதில் மிகு திறன் கொண்டவர் இவர்.

இவர்களோடு தோழர்கள் ஆசு....ஆத்மார்த்தி.
..அமிர்தம் சூரியா...பத்மாவதி விவேகானந்தன்
....யாழினி முனிசாமி...முரளி அரூபன்...முனைவர் .பா.ரவிக்குமார் ...சீனு.தமிழ்மணி.... ஆகியோரும் விருது பெற்றனர்...

விழாவில் தோழர்கள் சாந்தி....சியாமளா ராஜசேகரன்....தாரகை....ஆகியோரும் கலந்துக் கொண்டனர்...

எழுதியவர் : அகன் (4-May-14, 5:52 pm)
சேர்த்தது : agan
பார்வை : 190

மேலே