சிறைப் பறவை - படைக்கவி

பலவண்ண சிட்டுக்கள் பாருகண்ணு -அவற்றை
***கூண்டுக்குள் அடைச்சது யாரு கண்ணு ?
பறக்கத்தான் பார்க்குது பாரு கண்ணு அவற்றின்
***சிறகினை உடைச்சது யாரு கண்ணு ?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கொஞ்சும் சிட்டுக்கள் பாரு கண்ணு -அந்தக்
***குஞ்சுக்குத் தாயிப்ப யாரு கண்ணு ?
கொஞ்சம் சிந்தித்து பாரு கண்ணு அதற்கு
***வஞ்சம் செய்தது யாரு கண்ணு ?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உயரே பறக்குது பாருகண்ணு - அப்பறவைக்கு
***உல்லாசம் கொடுத்தது யாரு கண்ணு ?
கூடியே பறக்குது பாரு கண்ணு அவற்றின்
***கூட்டத்தைக் களைச்சது யாரு கண்ணு ?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மனுசனக் கூண்டுக்குள் பாரு கண்ணு - அவனை
***சிறைச் சாலைக்குள் அடைச்சது யாரு கண்ணு ?
மடமையில் மகிழ்வதைப் பாரு கண்ணு அது
***மனுசனேயன்றி வேறு யாரு கண்ணு ?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சின்னப் பறவைகள் பாருகண்ணு - கூண்டில்
***குற்ற வாளிதான் யாரு கண்ணு ?
சிந்தித்து ஒருநொடி பாருகண்ணு உன்னில் அதர்கு
***சுதந்திரம் தருவது யாரு கண்ணு ?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குழந்தைக் கவிதையாக இதைப் படைக்கிறேன் .
பெரியவர்களும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் !