பர்சைப் பார்ப்பர் பணம் ஒன்றுதான் குறியே - நேரிசை ஆசிரியப்பா

(நேரிசை ஆசிரியப்பா)

ஆயிரத்துத் தொள்ளா யிரத்து எழுபத்
தொன்றில் பிறந்த எனதுபெண் குழந்தை
பிறவியில் இதயநோய் நாலே மாதம்;
பாலே குடிக்காது அழுதே அடைந்தது
குடலிறக்கம்; அழஅழ மிகுந்தது தொல்லை;
உடனே எடுத்துச் சென்றேன் குழந்தை
அறுவை சிகிச்சை மருத்துவர்
டீ.துரை ராசனிடம்; சோதனை செய்தாரே! 1

என்னையும் பார்த்தார்; சொன்னார் நீங்களும்
மருத்துவர், நானும் மருத்துவர், பார்ப்பேன்
மருத்துவம் இலவசமாய் கட்டணம் எதுவும்
செலுத்தத் தேவையில்லை! அன்று இருந்தது
பெருந்தன்மை! இன்றுண்டா எவரேனும்? உள்ளபடி
உரித்தாய்ச் சொல்லலாம்! தெரிந்தவரே ஆனாலும்
பார்ப்பர்! பையிலுள்ள பர்சைப்
பார்ப்பர்! பணம் ஒன்றுதான் குறியே! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-May-14, 2:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 100

மேலே