எங்கும் நிறைந்து என்னுள்ளும் நிறைந்து

உள்ளத்தில்
அமர்ந்து
என்னத்தை வளர்க்கும்
சக்தியே எனது
ஆன்மாவே...........!

உடலாய் நான்
இருக்க உயிராய்
எனை வளர்த்தாய்
என்னுள் என்றுமே..........!

எலும்புடன் சதையாக
நரம்புடன் உதிரமாக
உருவடுத்தேன் நான்
உன்னை வளர்த்தேன்.........!

உடைந்த பானை
சோற்றுக்கு வேகாதே
எனை உடைத்துவிட்டால்
உனக்கு நோகாதே............!

அருகில் இருந்து
பிடரி நரம்பில் இருந்து
உயிராக இருப்பவனே
எமை இயக்குபவனே........!

எல்லாம் தெரியும்
உலகும் அறியும்
பிதட்டும் மூடர்கள்
உன்னை அறிவார்களா..........!

சுடராக ஒளியாக
காற்றாக நினைவாக
எங்கும் நிறைந்து
என்னுள்ளும் நிறைந்து
நாடகமாடும்
ஆன்மாவே...........!

உன்னை
தேடும் அடியானில்
நானும் ஒருவன்..........!

எழுதியவர் : லெத்தீப் (14-May-14, 1:03 pm)
பார்வை : 78

மேலே