என் இசை நண்பனுக்காக

இசை இல்லையேல் மனம் இருகிடுமே
நீ இசைத்தாயே உன்னை கண்டு பெருமிதமே
===========================================
பள்ளிக் கற்று கொடுத்தது பாடம் மட்டும்
பண்பைக் கற்றுகொடுத்தது தாயின் வளர்ப்பு முற்றும்
===========================================
உந்தன் விரல் அசைவால் இசை பிறக்கட்டும்
இசையை செவி விழுங்கிட இமை திறக்கட்டும்
===========================================
மலர் தேடி போன வண்டும்
இசை தேடி உன்னுள் அண்டும்
===========================================
வழியால் துடி துடிக்கும் நெஞ்சும்
இசையால் சிறகடிக்கும் கொஞ்சம்
===========================================
மரம் அசைய குயிலின் இசை
மலர் அசைய காற்றின் இசை
கடல் அசைய அலையின் இசை
மயில் அசைய மழையின் இசை
இசையால் அசையா உயிரில்லை
இசையால் உருகாத மனமில்லை
நீ இசைத்தாயே........இசையால் பலர் இதயத்துடிப்பில் இணைந்தாயே.......துடிப்பாக .......

எழுதியவர் : kalaiselvi (20-May-14, 10:47 pm)
பார்வை : 96

மேலே