நெஞ்சுக்குள் நிற்கின்ற தோழியே

உலகம் வரவேற்ற உன்னத கவிதை
உயிராய்..
மனதால் மழலைக் குழந்தை
மனிதனாய்..
பூ இதழ் மென்மை, மௌனம்.. மலர் சூடும்
பெண்மையாய்...
இன்று தான் பிறந்தது.
உன் தாய் கருவில் சுமந்தது தன் மகளை மட்டும் அல்ல..தமிழின் தனி ரசிகையை ..
தன்னை அழகாய் வர்ணிக்க வந்த
கவிதைகளின் காதலி..
உன் வரவால் தமிழ் விட்ட நிம்மதி பெருமூச்சு
தென்றலாய் ...வலம் வந்து , ஓர் நாள்
என்னையும் சேர்ந்தது..
தோழியாய்..
என்னை தோற்றுபோக அனுமதிக்காத..
அன்பான இன்னொரு இதயமாய்..
நெஞ்சுக்குள் நிற்கின்றாய்…தோழியே ..
நலம் வாழ..
இன்று..நதியின் வருகையால் நனைந்து,குளிர்ந்த,
அன்று.. வற்றிய நதிக்கரையில்; வாடிய நாணலின்..
வாழ்த்துக்கள்..
அன்புடன் கவியுகன்..

எழுதியவர் : கவியுகன் (31-May-14, 3:50 pm)
பார்வை : 268

மேலே