பெரியோரிடம் நடந்து கொள்ளும் முறை - ஆசாரக் கோவை 28

இருகையால் தண்ணீர் பருகா ரொருகையாற்
கொள்ளார் கொடாஅர் குரவர்க் கிருகை
சொறியா ருடம்பு மடுத்து. 28 ஆசாரக் கோவை

பொருளுரை:

இரண்டு கைகளாலும் அள்ளித் தண்ணீர் குடிக்கக் கூடாது.

பெரியோர் கொடுக்கும் பொருளை ஒரு கையினால் வாங்கக் கூடாது.

பெரியோர்க்கு எப்பொருளையும் ஒரு கையால் கொடுக்கக் கூடாது.

இரண்டு கைகளையும் வைத்து உடம்பில் சொறியக் கூடாது.

கருத்துரை:

தண்ணீரை இரு கையாலும் குடிக்கலாகாது. பெரியோரிடம் ஒன்றைப் பெறும் பொழுதும், கொடுக்கும் பொழுதும் இரு கையாலேயே வாங்கவும் கொடுக்கவும் வேண்டும். உடம்பை இரு கைகளாலும் சொறியலாகாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jun-14, 7:56 am)
பார்வை : 130

மேலே