ஏன் சிரித்தாள்.......!

அன்று எனக்கு,
என்றுமில்லாத
மகிழ்ச்சி...!
அழகாய் இருந்தாள்,
பா.விஜய்யின் பாடல் போல...!
டாவின்சியின் ஓவியம் போல..!
கொழும்பில் இப்படியும் ஒரு தேவதையா...!
அதுவும் எனக்கருகில்,
பஸ்ஸில், என்னை நானே கிள்ளிப்பார்த்தேன்,
அவளால் தானோ என்னவோ,
பம்பலபிட்டியில் இறங்கவேண்டிய நான்,
வெள்ளவத்த தாண்டி சென்றுகொண்டிருந்தேன்..!
சட்டென எழும்பிய
அவள் என்னைப்பார்த்து சிரித்துவிட்டு இறங்கிச்சென்றாள்,
ஏன் சிரித்தாள்.......!
ஐயோ....! என்ர கடவு சீட்டு,
ஆயிரம் ரூபா!

எழுதியவர் : ரஞ்சித் ஈஎஸ்பீ (9-Mar-11, 1:20 am)
பார்வை : 351

மேலே