கனவுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
கனவுகள் பல சுமப்பதால்
கண்களை இமைக்க மறக்கிறோம்
கண்களை இமைக்க மறந்ததால்
உறக்கம் என்பதில்லை
உறக்கம் முடிந்து கனவு கலைகையில்
அதை ஏற்கும் மனது
மனதில் சுமக்கும் கனவு கலைகையில்
அதை ஏற்க மறுக்கிறது
கண்விழிக்கும் வரை கனாவில் வரும்
கனாக்கள் முடிவதில்லை
கண்மூடும் வரை மனிதன் காணும்
கனாக்கள் முடிவதில்லை