மனித நேயம்

வறுமை சிற்பிக்குள்
வந்து உதித்த
முத்துவோ ?

முழங்கைக்கு மேல்
சட்டை அணிந்திருக்கும்
கரும வீரர்
காமராஜரோ ?

ஆயுதத்தை பின்னிட்டு
அடி எடுத்து வைத்திருக்கும்
அகிம்சை காந்தியோ ?

பாதரட்சைகள் இன்றி
பாதம் பதித்து
பாடலால் பாரதம்
திருத்த வந்த
பாட்டன் பாரதியோ ?

பன்முகங்கள் கொண்ட
பாலகன் பாரதத்தை
இருகரங்கள் கூப்பி
இன்முருவலுடன் கேட்பதெல்லாம்
இதய பூவில் இருந்து
எடுத்து விடாதீர்கள்
மனித நேயம் என்னும்
மகரந்தத்தை ...

எழுதியவர் : Tania (9-Jun-14, 4:43 pm)
Tanglish : manitha neyam
பார்வை : 251

மேலே