ஒற்றுமை

பகவத்கீதையரின்
பகலவனும்
திருக்குரானியரின்
இளம்பிறையும்
விவிலியத்தாரின்
விண்மீனும்
சின்னங்கள் வேறானாலும்
சிதறி இருப்பது
ஓர் வானில் தானே !
இயற்கையே
இணைந்து இருக்கும்போது
இடையில் பிரிவினை செய்திட
இன்னமும் நானும் நீயும்
நினைப்பதுவும் ஏனோ ?
மனிதா மதத்தால்
நாம் வேறுபட்டாலும்
அது காட்டும்
மார்க்கத்தில்
ஒன்று தானே !