என்ன செய்ய போகிறேன்

என்ன செய்ய போகிறேன்,

கல்லூரி படிப்பு முடிந்து விட்டது
கூடவே சந்தோஷங்களும் தொலைந்து விட்டது ,,

நட்பு கூட்டி வந்து விட்ட பாதையில்
தனியாக நின்று கொண்டிருக்கிறேன்,,,

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் யாருமே இல்லை
எல்லோரும் காலத்தின் கட்டாயத்தால் ஓடி கொண்டு
இருக்கிறார்கள்,

இத்தனை நாட்கள் கூட்டமாக சேர்ந்து
வாழ்கையை பகிர்ந்து கொண்டவர்கள்
இன்று தனி தனியாய்....

தேர்வில் நான் தோற்று போனதால்
நான் உங்களை பின் தொடர முடியவில்லை...

தோல்வியில் இருந்து மீண்டு வந்துவிட்டேன்
நீண்ட இடைவெளிக்கு பின்னால்,


கண்ணுக்கு எட்டிய தூரத்தில் யாருமே இல்லை
எல்லோரும் காலத்தின் கட்டாயத்தால் ஓடி கொண்டு
இருக்கிறார்கள்,

நட்பு கூட்டி வந்து விட்ட பாதையில்
தனியாக நின்று கொண்டிருக்கிறேன்,,

என்ன செய்ய போகிறேன்,......


(எதார்த்தம் )........

எழுதியவர் : கவிதையின் காதலன் (21-Jun-14, 12:02 pm)
சேர்த்தது : கவிதையின் காதலன்
Tanglish : yenna seiya pokiren
பார்வை : 85

மேலே