ஓவியம்
மனம் சொல்வதை காகிதத்தில் எழுதுவது
கவிதை என்னும் பேசும் ஓவியம் ,
நட்பு என்பது எழுதாத கவிதை
நண்பர்களின் இதயத்தில் பேசுகின்ற ஓவியம் .
அன்பு என்பது அழியாத கவிதை
பேசுகின்ற , வாழ்த்துகின்ற, அன்பான, ஓவியம்,
காதல் என்பது செதுக்கப் பட்ட கவிதை ,
கண்ணீரால், கற்பனையால், கடைந்தெடுத்த ஓவியம் .
ஓவியம் என்பது சிற்பமல்ல, சிலை அல்ல
கல்நெஞ்சையும் கனிய வைக்கும் காவியம் .