நுகர்ந்திடாமலே

தொலைதூரம் தான் எனினும் 
கரையின் நிறை மணமதை
கடல் அறிந்துகொள்கிறது 
அலையாடி விளையாடிடும்
அலைகளின்  துணைகொண்டு  .....

தொலைதூரம் தான் எனினும்
மண்ணின் மயக்கும் மணமதை
வானம்  அறிந்துக்கொள்கிறது
வந்துவிழும் மழையின் மூதலான
முதல் துளியின் துணைக்கொண்டு .....

எங்கோ
தொலைவினில் தான் எனினும்
பேதையிவள் மனதின் மணமதை
நான் பகர்ந்திடாமலே
நீயும் வந்து நுகர்ந்திடாமலே
அறிந்துணர்ந்து கொ(ல்) ள்கிறாய்  ....

மாயன் நீ 
கொண்டிருக்கும் 
மாயம் தான் என்ன???

எழுதியவர் : (18-Jul-14, 10:33 pm)
சேர்த்தது : iyarkai
பார்வை : 59

மேலே