பார்வை ஒன்றே போதும்
ஆயிரம் இதழ் கொண்ட தாமரையே
தளத்தில் தோன்றிய புன்னகையே
கனவான என் கவிக்கு உரு தந்தவளே
தள ஓரம் கவிஞனாக்கிய கன்னிகையே
தினம் புது வாசமலர் நீ
உனை விரும்பும் பாசமலர் நானே
தேன் திணை வேண்டாம்
செந்தமிழ் பயில சிந்து இசைத்தால் போதுமே
வந்துணை பார்ப்பவர் கோடி
வஞ்சகம் கொண்டவர் ஓடி
பஞ்சம் போக்கும் அமுதன்னையே
கொஞ்சும் தமிழிசைக்கும் என்னுள்
தஞ்சம் கொண்டு விடு !
நெஞ்சம் நினைக்கும் உனை
கொஞ்சி மகிழ வஞ்சி
உன் பார்வை ஒன்றே போதுமே !!