புதிய கீதை 1---அறிமுகம்

புதிய கீதை.(1)



உன்னையே நீயும் உனக்குள்ளே தேடென்றே

வெண்ணைத் திருடன் விளக்கிய கீதையே

கண்ணைத் திறந்தது காண்டீபன் வில்லையே

மண்ணைப் புதுப்பித்தும் மாற்றமும் கண்டதே.



விவிலியம் குரான் விளக்கும் மறைகள்

அவசரம் கூறிடும் அற்புத நெறிகள்.

அவதார அவசியம் ஆற்றும் குறிகள்

நவயுகம் செய்யும் நீதியின் மொழிகள்.



கீதை விவிலியம் குர்ரான் புனிதமே!

பாதை பழக்கிய பண்பினை நனிதுமே!

ஆதி முதலது அன்பினை அமைக்குமோ?

வேதம் அதுதான் என்பதை சமைக்குமோ?



தர்மம் உலகில் தவிக்கும் பொழுதெலாம்

கர்மம் விலக்கிக் கருக்கும் பொழுதெலாம்

மர்மம் துலக்கி மருவிப் பிறக்குமாம்

துர்மம் அழிக்கப் புதியதாய் கீதைகள்.



அதர்மம் அழிக்கும் அவதாரம் கண்ணன்.

அநீதி ஒழிக்கும் அவசரம் ஏசன்.

ஈகை இரக்கம் எனவும் நபிகள்ஆம்

ஆகமம் தந்தும் அகிலம் அமைத்தர்.



தாயைப் பழித்திடும் பாவம் படர்வதும்.

சேயை ருசிக்கும் அவலம் தொடர்வதும்

கொள்ளை கொலையும் கொள்வதும் தொழிலோ?

கள்ளமும் கலையும் பேணுதும் எழிலோ!!



பாவமோ தர்மம்! பலியிடும் சாபமோ!

கோபமோ கர்மம்! கொலைபடும் நாசமோ!

இன்னொரு தூதன் எழுச்சியும் மெய்யாமோ!

பின்னொரு வேதம் புரட்சியும் செய்யாமோ!



கொ.பெ.பி.அய்யா.



தொடரும்.................

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (7-Aug-14, 12:16 pm)
பார்வை : 150

மேலே