சுகந்திர இந்தியா ஆனால் நாம்

வருடம் ஒருமுறை வாய்த்த திருநாள்
வரலாற்றினை புரட்டும் வாய்ப்பாய் ஒருநாள்
வெள்ளையன் விரட்டிய வீரமண் என
வீராப்பு பேசியே விடைபெறும் இந்நாள்
மொழி,இனம்,மதம் பல கடந்து
மொழிந்தோம் நாம் 'இந்தியர்' என
வேற்றுமையில் ஒற்றுமை உண்டா இங்கு ?
அடிதடி சண்டையில் தெருக்குழாய் தோற்கும்
சட்டத்தின் ஓட்டைகள் அனைவருக்கும் சமமாய்
ஊழல் என்பது நாறிப்போனதாய்
கருப்பு பணம் வெளிவரா புதிராய்
வறியவர்க்கு வாழ்வாதாரம் இன்னும் குறையாய் ..................
பொதுஒழுங்கு சிந்தனை ,பொதுஉடைமை கொள்கை
எதுவும் சட்ட வரையாய் மட்டுமே...............
சமூக பொறுப்பு,தனிமனித உரிமை,கடமை
அரசியல் அறிவு அறிந்தோமா நாம் ?
திக்கற்ற நாதியாய் தெருவில் கிடக்குது
சுகந்திர பறவையின் சிறகுகள் எங்கே?
சுகந்திர நாளில் சபதம் ஏற்போம்./..........................
சட்டத்தின் கைகள் இறுக செய்வோம்
பத்தில் ஒன்று வரியாய் மாற்றுவோம்
கருப்பு பணம் அது காணமல் போகும்
வியக்கும் வண்ணம் விஞ்ஞானம் வளர்ப்போம்.
இறையாண்மை வேண்டி 'இந்தியர்' என்போம்.