இறைவனின் இணைப்பு
அம்மா...
உன் அரவணைப்பு,
கருவறையின் கதகதப்பு !
காற்றும் கூட
இடைபுக முடியா
உன் அருகாமை,
என் சுவர்க்கம்!
நான்
உருவாய் வளர
உன் உடல் தந்தாய்.
உணவாய்,
உன் உதிரம் தந்தாய்.
என் உலகமாய்,
நீயாகினாய்.
நானாகவே, இங்கு...
நீ மாறினாய்!
மொழி அறியா நான்
உன் பேச்சில்
மயங்குகிறேன்.
உன் ஒவ்வொரு
அசைவிலும்
உன்னை உணர்கிறேன்!
உனக்கும் எனக்கும்
உறவையும்
தாண்டிய
ஓர் உன்னதப் பிணைப்பு!
இது
தாய் சேய் என்னும்
இறைவனின் இணைப்பு!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
