எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன்

எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் ....!!!

என்னவளை இன்புறமுன்
நாணமும் ஆண்மையும்
கொண்டவனாய் இருந்தேன்
என்னவளை இன்புற்றபின்
எல்லாவற்றையும் இழந்து
நிற்கிறேன் ....!!!

அவள் தந்த இன்பம்
என்னையும் ஆண்மையையும்
தொலைத்து விட்டது
எல்லாவற்றையும் மறந்து
மடலேறப்போகிறேன்...!!!


திருக்குறள் : 1133
+
நாணுத்துறவுரைத்தல்
+
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 53

எழுதியவர் : கே இனியவன் (21-Aug-14, 7:02 pm)
பார்வை : 65

மேலே