மண்ணில் மலர்ந்த மனித நேயம்
அன்னை தெரேசா
----------------------------
கடைக் காரன் காரி உமிழ்ந்த எச்சிலை
கையேந்தி கனிவோடு வாங்கிக் கொண்டு
எனக்கு இது போடும் - நண்பா
பசியால் வாடும் மனிதருக்கு தா என்று
கேட்ட தாய் உள்ளம் ....!
நோபல் பெற்ற விருந்தில் மீதம் வைத்த
எச்சில் உணவை மனம் நோகாமல் தன
பையில் சேகரித்து ஆசிரமக் குழந்தைக்கு
அளித்த அன்பு உள்ளம் ....!
குப்பையிலும் புழுதியிலும் குன்றிட்ட உயிர்களை
வாரி அணைத்து வாழ்வு தந்த பேருள்ளம்.....!
புண்ணும் சீழுமாய் புழுத்துப் போன மனிதர்களை
தொடுத் தூக்கி சுத்தப் படுத்திய மனித நேயம்
கடவுளின் அவதாரமாய் ..! கருணையின் ஊற்றாய்
அன்பின் சிகரமாய் அனைவர்க்கும் தாயாய்
அன்னை தெரேசா அவதரித்த தினமாம் இன்று
இல்லாதவர்க்கு இருப்பதை அளிப்போம் ...!
மனித நேயத்தை மண்ணில் விதைப்போம் ....!