வெங்காயம்
எல்லோர் வீட்டிலும்
மனைவிகளை அழ
வைக்கும், முதல் மாமியார்...
ஆண்களை கூட
அழவைக்கும் இது
நிச்சயம் பெண் வர்க்கம்
தான் ....
சொந்தம் சொல்ல
ஏதும் இல்லாதவள்,
சோடியம் க்லோரைடை
வர வைக்கிறாள்,
ரொம்ப வெறப்பான
கண்களிலும் கூட....
சிலர் நெஞ்சில் கூட
இல்லாத ஈரத்தை
அவரவர் கண்களில் வர
வைப்பவள்...
வலி என்னமோ
அதற்குத்தான், இன்றும்
வழிகிறது கண்ணீர்
நம் கன்னத்தில்....