வேலையில்லா காதல் - இராஜ்குமார்
வேலையில்லா காதல்
=======================
மனதில்
தீயாய் எரிந்து அணைகிறது
ஒளியாய் ஒளிர்ந்து இருள்கிறது
விழியில்
பார்வை திருடி ரசிக்கிறது
நிறத்தை பிரிக்க மறுக்கிறது
வழியில்
பயண தூரம் இனிக்கிறது
சுமக்கும் பாரம் குறைகிறது
நேரில்
கோபம் வீசி கொல்கிறது
நேரம் காலம் வெறுக்கிறது
இரவில்
இமையை இறுக்கி பிடிக்கிறது
கற்பனை வானில் மிதக்கிறது
வீட்டில்
சுவரில் ஒளிந்து அழுகிறது
கவிதை எழுதி வாழ்கிறது
- இராஜ்குமார்
நாள் : 12 - 8 - 2011