மாற்றங்கள்
மாற்றங்கள்
நான் பல சமயம் நினைத்தது உண்டு குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்று ,
ஏனைன்றால்
குழந்தையாகவே இருந்திருந்தால்,
அடுத்தவர் செய்யும் அக்கிரம் பற்றி
அறியாதவர்களாய் இருந்திருக்கலாம்.
குழந்தையாகவே இருந்திருந்தால்,
சமுதாயத்தில் நடக்கும் அவலங்கள் பற்றி
அனுபவம் அற்றவர்களாக இருந்திருக்கலாம் .
குழந்தையாகவே இருந்திருந்தால்,
நாட்டில் நடக்கும் அநியாயங்கள் பற்றி
புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்திருக்கலாம்.
என்ன செய்வது
மாற்றங்கள் வாழ்வில் மாறாதிருப்பவை.
அதனால்
நானும் காத்திருக்கிறேன் -- ,
என் வளர்ச்சி போல்
என் நாடும்
பரிணாம வளர்ச்சி பெற.......?..... .