கண்ணாடி பொய் சொல்கிறது-வித்யா

கண்ணாடி பொய் சொல்கிறது.........!-வித்யா
அதிகாலையில் என் தரிசனம்
எனதறை நிலைக்கண்ணாடியில்...........!
மின்னல் நானும் கண்கள்
ஒளி......
ரோஜாக்கள் மரித்து
உயிர்பெற்ற கன்னம்.......
என எல்லாம்
மாறிப்போயிருந்தது
அன்றைய பிம்பத்தில்.........!!
வெள்ளைக் கம்பிகளென
நரை முடிகளும்..........
வாழ்நாள் ரேகையென
சுருக்கங்களும்.........
ஒளி குன்றிய கண்கள்
சூழ்ந்த கருவளையங்களுமென.....!!
இது நான் அல்ல......
கண்ணாடி பொய் சொல்லி இருக்கக் கூடும்.......!!
தலைக்கு கருமை பூச்சு
முகத்திற்கு வெண் பூச்சு
கண்களுக்கு கண்மை
உதட்டுக்குச் சாயம்...........
இவ்வளவு பூசியும்
கண்ணாடி அதே பொய் சொல்கிறது......
எனக்கு வயதாகி விட்டதென்று.......!!
=====================================================
என் முதுமை இப்படி இருக்கக் கூடும்..........!