சீர்க்கெட்ட சிற்பியாய் நான் - இராஜ்குமார்
![](https://eluthu.com/images/loading.gif)
சீர்க்கெட்ட சிற்பியாய் நான்
==========================
கண்மணி நீ
கண்ணிமைக்கும் வரை
கல்லான உன்மனதை
எனது காதல்
சிலையாகச் செதுக்க
தினசரி முயற்சியோடு
சீர்க்கெட்ட சிற்பியாய் நான் ..!
ஒற்றை பூவிதழ்
அழகாய் சிரிக்காமல்
கோபமாய் முறைத்தாலும்
மயங்கும் எந்தன்
மனதிற்குள் - காதல்
காணாமலா போகும் ..!
பாரேன் ..
உன் பெயரை யாரின்
உதடோ உச்சரிக்க - உன்
புகைப்படம் பார்க்க
மறக்குது விழிகள் ..!
உந்தன்
புகைப்படம் பார்த்த
நொடிகளில் - உன்
பெயரை நானே சொல்ல
செவிடாகுது செவிகள் ..
பெண்ணே - எந்தன்
உறக்கத்தின் உளறல்
உள்வாங்கும் வார்த்தை நீயோ ?
- இராஜ்குமார்
நாள் ; 28 - 12 - 2011