காதல் kadal
காதல் கடல்
முத்தை இது வரை கண்ட தில்லை
ஆனால் மூழ்கி விட்டேன் கடலுக்குள்ளே
அங்கு கவசமாய் என்னை சுற்றி
இருந்தவை தண்ணீர் மட்டுமே
படையெடுத்து மீன்கள் எல்லாம்
என்னை சுற்றி வளைத்தன
விசாரணையில் நான்
திருடன் என முடிவானது
பிறகு தான் கேட்டது
உனக்குள்ளே ஒரு முத்து பிரகாசிகிறதே
பிறகு ஏன் கடல் முத்தை
திருட வந்தாய் என்று
அதற்கு எப்படி புரிய வைப்பேன்
அது நம் காதல் நினைவுகல் என்று
பிறகு தான் கூறினேன் நம்
காதல் கதைகளை
தண்ணீருக்குள் இருந்தாலும்
அவை கண்ணீர் வடித்தன
பிறகு என்னை விடுதலை செய்தன
பரிசாய் எனக்கு ஒரு முத்தையும்
கொடுத்தன என்னை கரை சேர்த்தின
நான் விழுந்த கடல் காதல்
என்னை சிறை பிடித்தவை உன் நினைவுகள்
பிறகு நம் காதல் கதைக்கு
கண்ணீர் வடித்தது யார் ஆம் உன் நினைவால் தினம் அழுகும் எனது விழிகள்தான்
விடுதலை செய்தது என் காதல் உன்னிடம் சொல்ல முடியாமல் தவித்தேன்
இன்று சொல்லி விட்டேன் இது மன போரட்டத்தின் விடுதலை
எனக்கு கிடைத்த பரிசு உன் காதல்