மறுமொழி
புலர்ந்த காலை பொழுதில்
புரியாத கால்களின் ஓட்டங்களுக்கிடையே
மூதாட்டி இவள்
காத்திருக்கிறாள் பேரூந்திற்கு..
மேகங்கள் பகலவனை மறைத்து
நிழல் பரப்பியிருந்த போது
அருகில்
அவளின் முதிர்ந்த கணவன்
கையிலிருந்த பூ மாலை
இவர்கள்
இழவு வீடு போகிறார்கள்
என்று அழுது கொண்டிருந்தது....
முழங்கால் சில்லு வலிக்க நிற்பவள்
கண்களை இறுக்கி
கைகளை கூப்பிய போது
மறுமொழியாய்
பகலவன் வெளிச்ச முகம்
பரப்பி மறைந்தான்....
ஈமக்கடனுக்கு போய்சேர
பேரூந்து கிடைக்கவேண்டுமென
இவள் வேண்டியிருக்க கூடும்...