தோற்று போன என் நட்பு

என் உலகில் நான் அதிகமாக நேசித்த ஒரு பெண்
என் உயிர் தோழி .....
அவள் புன்னகையில் என் கண்ணீர் மறந்து எனக்கே தெரியாமல்
புன்னகைத்து நின்றேன் ............
அவள் கோபத்தில் கூட என் மீது அவள் வைத்திருக்கும்
அன்பை கண்டு மெய் சிலிர்த்து நின்றேன்......
என் முதல் குழந்தையாய் அவள் தேவைகளை
பூர்தி செய்து தாய்மையுடன் பாதுகாத்தேன் ......
அவள் அழுது நிற்கும் நேரங்களில்
அவள் கண்ணீர் துடைத்து என் கண்ணீர் துளியை
தண்ணீரோடு கலந்தேன் .............
அவள் தினம் கொடுக்கும் முத்தத்தில்
என் தாயின் ஸ்பரிசம் கண்டேன் ........
கதை சொல்லி உறங்க வைக்க தாயான நான்
பாட்டி ஆகி போனேன் .....
அவள் உறங்கும் அழகை ரசித்து ரசித்து
என் உறக்கம் மறந்து போனேன் .......
எல்லா உறவும் நானாகி நிற்க அவள் என்னில்
உயிராகி போனாள்........

என் தினசரி வாழ்வின் இந்த சூழலில்
திடீர் மாற்றம் ........

அவள் வாழ்வில் காதல் வந்த நேரம் என் நினைவுகளை
மாற்றி அவன் நினைவு குடிகொண்டது அவள் உள்ளத்தில் ..............

பேசும் நேரங்கள் குறைந்து போயின ...
பார்க்கும் பார்வைகள் அவள் மறைக்க நினைக்கும்
பொய்களில் நிறைந்து போயின .........

அவள் கால்கள் என்னை பார்க்க முடியாமல்
விலகி போயின..
அவள் இதை என்னிடம் கூறும் முன் எனக்கு தெரிய வந்தது
அவளின் காதலன் நல்லவன் இல்லை என்று .......

உயிர் போல் பார்த்து கொண்ட என் தேவதையின்
கண்களில் கண்ணீர் வர தாங்க முடியாமல் தவித்து நின்றேன்...

என் வார்த்தைகளை நம்பாமல் அவன் காதலுக்காக
என் நட்பை உதறி செல்கிறாள் இன்று..

நான் எப்படி காப்பேன் என் பிள்ளையை
இன்று என்மீது அவளின் நம்பிக்கை சிதைந்து போக ....

நீ என்றும் என் தோழி மட்டும்தான்
என் தாயல்ல என கூறிவிட்டு தொலைவாக சென்றாள்....

என்னை பிணமாக விட்டு....

என் நட்பு தோற்றதென்று அவள் நினைக்கிறாள் ....
என் பாசம் சாகாமல் அவள் நினைவுகளை
சுமந்து கொண்டு என் உயிரை பிடித்திருக்கிறது...............



என்றும் உங்கள்
உமா நிலா

எழுதியவர் : உமா நிலா (12-Nov-14, 6:30 pm)
பார்வை : 426

மேலே