காலத்திரயம்
காலத்திரயம்
----------------------------------------
நேற்று
நடந்ததைப் பேசிப் பேசியே
வயதாகி விட்டது .
இன்றைய தினத்திலும்
நேற்றைய தினத்தைத்
தோண்டுவதால்
இன்று என்பதே
இல்லாமற் போயிற்று .
நாளைய தினத்திலும்
நேற்றைய தினமே
தூவப்படும் என்பதால்
நாளையும் இல்லாமல்
போய்விடக் கூடும் .
எனினும் ...
எப்போதும் ...
நேற்று
என்பது இனிமைதான் .
[ புதுப்புனல் நவம்பர் 2013 ] இதழில் வெளிவந்த என் கவிதை .