காதல் இம்சை -கயல்விழி

இளங்காலை கதிரவனை
இதமான தென்றலை
மணம்வீசும் மலர்களை
என் மனம் கவரும் குயிலிசையை
எதையும் ரசிக்காமல் கனத்தது மனசு
தேநீரும் கசப்பான விஷமாகி
குளிர் நீரும் கானலாகி
கொல்கின்றது என்னை
கைபேசி மௌனமாகி
காத்திருக்கின்றது உன்
அழைப்பிற்காய்
விநாடி நிமிடம் மணி என
கடிகார முட்கள் கூட
மெதுவாக நகர்கின்றது உன்
வாழ்த்து இல்லாததால்
வரப்போவதில்லை என
தெரிந்தும்
வழிபார்த்து ஏங்குது
விழிகள்
அகிம்சையான என் காதலை
இம்சிக்கும் அவனிடம் இனி
மண்டியிட போவதில்லை உதடுகள்
முணுமுணுத்தன
இதயம் மட்டும் அமைதியாய் துடித்தது இன்றோடு அதன் துடிப்பு அடங்கி விடும் என்ற
நம்பிக்கையில் ...!!