எல்லோரா ஓவியமாய்
எல்லோரா ஓவியமாய்
எனை கடந்து போகிறாய்
எரிமலை மேல் பூவாக
நான் கிடந்து வாடினேன்
அறியாமல் பூக்கிறாய்
தெரியாமல் பார்க்கிறாய்
வழியாலே சாய்கிறாய்
விட்டு விட்டு
கொல்கிறாய்
கண்ணுக்குள்ள உன்ன வைச்சே
கண்மையால கரைச்ச புள்ள
இடி விழுந்த மரம் இரண்டாக பிளப்பதுபோல
பனி விழுந்து
பாறை ஒன்று
சருகாகி போகுதே!