அவள் மான் தேன்

அந்த மான்
-----அவள் விழியில்
இன்பத் தேன்
------அவள் இதழில்
சொந்தம் கொண்டாடுவது
-------என் மனதில் !
அந்தக் காற்று
-----பூந் தென்றல்
தென்றலில் சிரிக்குது
------பூ மலர்கள்
சொந்தம் கொண்டாடுவது
-----அவள் கூந்தல் !
அவள் விழியின்
------பார்வையில் காதல்
காதலில் இதழ்கள் புரியுது
----- மென் புன்னகை
அவள் புன்னகையில்
----விரியுது என் கவிதை
அந்தக் கவிதையை கொண்டாடுவது
-----அவள் நெஞ்சம் !
~~~கல்பனா பாரதி~~~