இதயத்துடன் என்றும் நீ

எழுதினேன் கடிதம் உனக்கு
எழுந்து வா என்னிடம் என்று
எப்படி வர வேண்டும் என்று
என்னிடம் கேட்டாய் நீ.

எதுவும் வேண்டாம் எனக்கு
என்னவளாய் நீயே போதும்
உன்னையே நான் நினைத்து
என்னையே கொடுத்தேன் உனக்கு.

கதிரவன் எழும் முன்னே
என்னையே நீ எழுப்பி
எத்தனை இனிமை தந்து
இனிக்கவே வைத்தாய் என்னை.

இதுவே போதும் எனக்கு
இல்லாளாய் நீ எனக்கு.என்
இதயம் இயங்கும் வரை
இயங்கி விடு என்னுடன் நீ.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (24-Dec-14, 11:45 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 76

மேலே